முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் கஜேந்திர குமார் பொன்னம்பலம்
ஆகியோருக்கு பதவி ஆசை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த பா.அரியநேத்திரன், இதன் காரணமாகவே அவர்கள் மாற்றுத் தலைமையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துவதாகவும் சாடியுள்ளார்.
சுரேஸுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பதவி ஆசை – அரியநேத்திரன்
தமிழீழ விடுதலைப் புலிகளே ஏக பிரதிநிதிகள் என நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதும், அதற்கு விரோதமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி செயற்பட்டதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அம்பாறை – பெரியநீலாவணை பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,