தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சிக் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு கட்சியின் செயலாளர் நாயகத்தின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. குறித்த கட்சியின் தலைவரான சிவசுப்பிரமணியம் அண்மையில் தான் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.
இருப்பினும் தன்னை கூட்டத்துக்கு அழைக்கவில்லை என தெரிவித்து கட்சி அலுவலகத்துக்கு இன்று சென்றுள்ளார்.
அப்போது கூட்டத்தில் இருந்த கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அவரை ஏன் இங்கு வந்தாய் என கேட்டு பேசியதுடன் தாக்குவதற்கும் முயற்சித்துள்ளார்.
தான் இரு தினங்களில் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் மீண்டும் வந்து இச் சம்பவம் குறித்து வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்து யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.