தமிழ் மக்கள் பேரவையைத் தனது தனிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்கிறார் என்கிற அச்சமும், குழப்பமும் அதில் அங்கம் வகிப்பவர்களிடையே தோன்றியுள்ளது. இந்தக் குழப்பங்கள் காரணமாக தமிழ்க் காங்கிரஸ் மற்றும் ஈபிஆர்எல்எவ் கட்சிகள் பேரவையை விட்டு விலகப் போகின்றன என்றும் பேரவை இரண்டாக உடையப் போகின்றது என்றும் கதைகள் உலாவத் தொடங்கியுள்ளன.
தமிழ் மக்கள் பேரவையைத் தனது தனிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்கிறார் என்கிற அச்சமும், குழப்பமும் அதில் அங்கம் வகிப்பவர்களிடையே தோன்றியுள்ளது. இந்தக் குழப்பங்கள் காரணமாக தமிழ்க் காங்கிரஸ் மற்றும் ஈபிஆர்எல்எவ் கட்சிகள் பேரவையை விட்டு விலகப் போகின்றன என்றும் பேரவை இரண்டாக உடையப் போகின்றது என்றும் கதைகள் உலாவத் தொடங்கியுள்ளன.
ஆனால் அவற்றை சம்பந்தப்பட்ட தரப்புகள் எவையும் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. பேரவையை எதிர்காலத்தில் நடத்திச் செல்வதற்காக ஒரு செயற்குழுவை உருவாக்கியிருப்பதுடன் அதனை அரசியல் நீக்கம் செய்திருப்பதாக முதலமைச்சர் நேற்றுமுன்தினம் அறிவித்தார். ஆனால் அந்தச் செயற்குழுவிற்குத் தானே தலைவர் என்றும் அறிவித்தார்.பேரவையை உருவாக்கிய பங்காளிகளுடன் கலந்தாலோசிக்காமல் திடீரென முதலமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது என்று அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது இந்தியச் சார்பு நிலைப்பாட்டைத் திடீரென வெளிப்படையாக அறிவித்திருப்பதும் அதுவே பேரவையின் கொள்கையாள இருக்கவேண்டும் என்பதுபோலக் கூறியிருப்பதும் கூடப் பிரச்சினையாகி இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு இது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பேரவை இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அதில் தொடர்ந்தும் நீடிப்பது சாத்தியமற்றது என்று காங்கிரஸ் கருதுவதாகவும் கூறப்படுகின்றது. இதனை அடுத்தே பேரவையிலிருந்து காங்கிரஸ் வெளியேறும் என்கிற கதைகள் உலாவத் தொடங்கியுள்ளன. ஆனால், அத்தகைய முடிவு எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பேரவையின் உருவாக்கத்தில் பங்கெடுத்த இரு அரசியல் கட்சிகளான தமிழ்க் காங்கிரஸ் மற்றும் ஈபிஆர்எல்எவ் ஆகியவற்றைப் புறமொதுக்கி விட்டு செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை ஈபிஆர்எல்எவ் கட்சித் தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அத்தோடு இதுவரை காலமும் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவராகவே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருந்தார். ஆனால் நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில் அவரது செயற்பாடுகள் தன்னை மையப்படுத்தியதே பேரவை என்பதாக அமைந்திருந்தது என்று பேரவை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் உணர ஆரம்பித்துள்ளனர். இதுவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல தரப்புகளும் சேர்ந்து உழைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்கிய பின்னர் அதனைத் தனியொருவர் தன்னுடைய நலனுக்காக மட்டும் பயன்படுத்திக்கொள்ள நினைப்பது ஏற்படுடையதல்ல என்று அவர்கள் குமுறுகின்றனர்.
இவ்வாறான சில பல காரணங்களால் பேரவைக்குள் கடும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. எனினும் எந்தவொரு தரப்பும் இது தொடர்பான உத்தியோகபூர்வக் கருத்துக்களையும் தெரியப்படுத்தவில்லை