‘மிக ஆபத்தான விபத்தில் சிக்கி முள்ளந்தண்டு உள்பட பல சத்திர சிகிச்சைகளை செய்து விரைவாக தேறிக்கொண்டிருந்த எமது கட்சியின் மூத்த உப தலைவர் பொ.சிவகுலதிலகசிங்கம், சிவசுப்பிரமணியத்தின் முட்டாள்தனமான செயற்பாட்டால் திடீரென உயிரிழந்தார்’ என்று ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழர் விடுதலை கூட்டணி தலைவரை நான் தாக்க முற்பட்டேன் என்றும், முக்கிய கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் உண்மைக்கு மாறான பல விடயங்களை அவர் கூறியதாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் வெளி வந்த செய்தி உண்மைக்கு புறம்பானதாகும்.
பொ.சிவகுல திலகசிங்கத் துக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், இறுதிச் சடங்கு ஒழுங்குகள் பற்றியும் மட்டுமே அன்றைய செயற்குழு கூட்டம் கட்சியின் உப தலைவர் சோமசுந்தரம் தலைமையில் அவசர அவசரமாக கூட்டப்பட்டது. அந்த நேரத்தில் தலைவர் சிவசுப்பிரமணியத்தின் நியாயப்படுத்த முடியாத வரவு அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
சிவசுப்பிரமணி யத்தின் அலைபேசி உரையாடலின் தாக்கமே கடும் சிகிச்சைக்கு ஆளாகி விரைவாக தேறிக்கொண்டிருந்த கட்சியின் மூத்த உப தலைவரின் திடீர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது. இதனால் மிகவும் சோகத்தில் இருந்த எமது செயற்குழு உறுப்பினர்கள், இவருடைய போக்கில் மிகவும் வெறுப்படைந்திருந்தனர்.
கடந்த ஆறுமாத காலமாக இவருடன் கட்சி எதுவித தொடர்பும் கொண்டிருக்கவில்லை. இவர் மீது சில சந் தேகங்கள் இருந்தமையால் இவரை நாம் எந்த நிகழ்வுக் கும் அழைக்கவில்லை என்பதே உண்மை. இவர் கூட்டத்துக்கு சமுகம் கொடுத்தமை திட்டமிட்ட ஓர் செயல் என நான் கருதுகின்றேன். இவரை நானே வெளியேறுமாறு பணித்தேன். அவர் மறுத்தமையாலே, நிர்வாக சபை உறுப்பினர்களே அவரை வெளியில் அனுப்பி வைத்தனர்.
இவர் மீது என்றோ எடுத் திருக்க வேண்டிய நடவடிக்கை, நிர்வாகக் குழுவின் தீர்மானத்துக்கமைய விரை வில் பொதுச் சபையில் எடுக்கப்படும். இந்த விடயத்தில் என் தலையீடு இல்லாதிருந்திருந்தால் இவரின் அன்றைய நடத்தை பெரும் விபரீதத்தை ஏற்படுத்தியிருக்கும். குறித்த சம்பவங்கள் அனைத்தும் எமக்கு மகிழ்ச்சி தரும் விடயமல்ல – என்றுள்ளது