இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்ப காலத்தில் இருந்து தற்போதுவரை
கூட்டாட் சித்(சமஷ்டி) தீர்வை நோக்கியே
பணிக்கின்றது. அதை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் கைவிடவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்.
தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.நாகநாதனின் நினைவுதின நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே வடக்கு மாகாண அவைத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது:-
எந்த இடத்திலும் நாம் கூட் டாட்சித் தீர்வைக் கைவிடவில்லை. அவ்வாறு கூறவுமில்லை. எமது ஆரம்பகால உறுப்பினர்கள் எம் இனத்தின் விடுதலைக்கா கப் பல போராட்டங்களை ஜனநாயக ரீதியில் முன்னெடுத்தார்கள். அமரர் நாகநாதனும் பல அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டவர் – என்றார்.
நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசாவும் உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது,
எமது இன விடுதலைக்காக நாம் போராடியபோது, தனி நாடு கோருகின்றோம் என்று அரசு எம்மைச் சிறை யில் அடைத்தது. நீண்ட நாள்களாகப் பிணை வழங்கப்படாது விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தோம். அப்போது நீதிபதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரன் இருந்தார். அவரால் எனக்கும், என்னுடன் இருந்த காசி ஆனந்தனுக்கும் பிணை கிடைத்தது.
நாம் பல போராட்டங்களை இனத்துக்காக முன்னெடுள் ளோம், முன்னெடுத்து வருகின்றோம். கூட்டாட்சித் தீர்வுக்காக ஆரம்ப காலத்தில் இருந்து போராடும் கட்சி எமது கட்சி மட்டும் தான். நாம் தொடர்ந்து போராடுவோம் – என்றார்.
நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட், கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
பணிக்கின்றது. அதை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் கைவிடவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்.
தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.நாகநாதனின் நினைவுதின நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே வடக்கு மாகாண அவைத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது:-
எந்த இடத்திலும் நாம் கூட் டாட்சித் தீர்வைக் கைவிடவில்லை. அவ்வாறு கூறவுமில்லை. எமது ஆரம்பகால உறுப்பினர்கள் எம் இனத்தின் விடுதலைக்கா கப் பல போராட்டங்களை ஜனநாயக ரீதியில் முன்னெடுத்தார்கள். அமரர் நாகநாதனும் பல அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டவர் – என்றார்.
நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசாவும் உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது,
எமது இன விடுதலைக்காக நாம் போராடியபோது, தனி நாடு கோருகின்றோம் என்று அரசு எம்மைச் சிறை யில் அடைத்தது. நீண்ட நாள்களாகப் பிணை வழங்கப்படாது விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தோம். அப்போது நீதிபதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரன் இருந்தார். அவரால் எனக்கும், என்னுடன் இருந்த காசி ஆனந்தனுக்கும் பிணை கிடைத்தது.
நாம் பல போராட்டங்களை இனத்துக்காக முன்னெடுள் ளோம், முன்னெடுத்து வருகின்றோம். கூட்டாட்சித் தீர்வுக்காக ஆரம்ப காலத்தில் இருந்து போராடும் கட்சி எமது கட்சி மட்டும் தான். நாம் தொடர்ந்து போராடுவோம் – என்றார்.
நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட், கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.