மேலும், அங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். இங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். ஆனால் தன்னை மகா வீரராக பேசுகின்ற விக்னேஸ்வரன் தனது பிள்ளைகள் இருவரையும் சிங்களவர்களுக்கு மனம் முடித்துக் கொடுத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இவ்வாறு மனம் முடித்தவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள். அங்கு அவ்வாறு முடித்து விட்டு இங்கே வந்து நாடகமாடுகிறார். அந்த நாடகத்திற்குப் பின் கஜேந்திரகுமார் செல்லுகிறார். அதற்குள் சுமந்திரன், சம்பந்தன், மாவை, சுரேஷ் ஆகியோர் சித்து விளையாட்டு விளையாடுகிறார்கள் எனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொருளாதார வளம் இல்லாத ஊவா மாகாணம் மொத்த தேசிய உற்பத்தியில் 4 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. வட மாகாணம் 1.2 வீத பங்களிப்பையே வழங்குகிறது எனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் இக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.