புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2018

மறைவிற்குப் பிறகு ஒன்று சேர்ந்த ஜெயலலிதா, கருணாநிதி!


திமுக தலைவர் கருணாநிதியின் உடல் 21 குண்டுகள் முழங்க அண்ணா நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமனார். இதையடுத்து, அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு கருணாநிதியின் உடல் முப்படை அணிவகுப்புடனும், வாழ்க… வாழ்க… என்று தொண்டர்கள் வழி நெடுகிலும் கோஷமிட்டவாறும் ஊர்வலமாக மெரினா கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அண்ணா நினைவிடம் அருகில்21 குண்டுகள் முழங்க சந்தான பேழைக்குள் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி மறைந்தார். அதாவது ஜெயலலிதா 05-12-2016 (2016+12+05=2033) அன்று இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். இதன் கூட்டுத்தொகை 2033 என்று வருகிறது.

இதே போன்று, கருணாநிதிக்கும் 07-08-2018 (2018+08+07= 2033) கூட்டுத்தொகை 2033 என்று வருகிறது. வாழும் போது, அரசியலில் எதிரியாக இருந்த நிலையில், இறந்த பிறகு இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad