புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2018

வாஜ்பாய் கொடுத்த பயிற்சியே கடற்புலிகளை தோற்கடிக்க உதவியது! - ரணில் பெருமிதம்


முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இலங்கையின் உண்மையான நண்பன் என்றும், விடுதலைப் புலிகளிற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கைக்கு வாஜ்பாய் உதவிபுரிந்தார் என்றும் தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று வாஜ்பாய்க்கான அனுதாப குறிப்பேட்டில் பதிவு செய்த பின்னர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இலங்கையின் உண்மையான நண்பன் என்றும், விடுதலைப் புலிகளிற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கைக்கு வாஜ்பாய் உதவிபுரிந்தார் என்றும் தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று வாஜ்பாய்க்கான அனுதாப குறிப்பேட்டில் பதிவு செய்த பின்னர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் மிகச்சிறந்த பிரதமர்களில் ஒருவர். அவர் இலங்கையின் உண்மையான நண்பன், இலங்கைக்காக எப்போதும் துணைநின்றவர். இலங்கையின் பிரதமராக நான் முன்னர் பதவி வகித்தவேளை இந்திய பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்தார். அவ்வேளை எங்கள் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையிலிருந்தது, வாஜ்பாய் எங்கள் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வற்கு உதவினார்.

வாஜ்பாய் அரசாங்கத்தின் காலத்தில் எங்கள் படையினரிற்கு வழங்கப்பட்ட பயிற்சி காரணமாகவே எங்களால் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை தோற்கடிக்க முடிந்தது.

வாஜ்பாயை 1975 இல் முதன் முதலில் சந்தித்தேன் 77 இல் அவர் வெளிவிவகார அமைச்சரான வேளை நான் பிரதி வெளிவிவகார அமைச்சராகயிருந்ததால் எங்கள் மத்தியில் நட்புறவு காணப்பட்டது. அவர் பிரதமரானதும் தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை எனக்கு வழங்கினார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ad

ad