வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக விக்கினே ஸ்வரன் கூட்டமைப்பினால் நிறுத்தப்படவேண்டு மென மக்கள் எதிர்பார்ப்பார்களானால் அதுபற்றி அவசரப்பட்டு முடிவெடுக்கவோ பகிரங்கமாக பேசவோ வேண்டிய அவசியமில்லையெனக் கருதுகிறேன். பக்குவமாக, அமைதியாக, பரபரப்பில் லாமல் இவ்விடயம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமாகிய இரா சம்பந்தன் தெரிவித்தார்.
விக்கினேஸ்வரனையே எதிர்வரும் மாகாண சபை தோ்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேடபாளாராக நிறுத்தவேண்டும் என கூட்டமைப்பின் தலைமைக்கு தாம் வலியுறுத்திவருவதாக பங்காளிக்கட்சியான ரெலோவின் தலைவரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் வினவியபோதே இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
தமிழ் மக்கள் மத்தியில் இன்று அவசியமான தேவையாக இருப்பது ஒற்றுமையாகும்.இந்த ஒற்றுமையை குலைக்கும் வகையில் குந்தகமாக எவரும் செயற்படக்கூடாது. அவ்வாறு செயற்பட்டால் தமிழ் மக்கள் எடுத்த ஜனநாயக தீர்ப்புக்கு மாறாக அதை பலவீனப்படுத்துவதாக அமைந்துவிடும்.
அவ்வாறு யாராவது செயற்பட முனைந்தால் எனது அபிப்பிராயத்தின்படி அதுபாரிய தவறாக போய்விடும். இன்றைய நிலையில் எம்மிடமுள்ள ஒரேயொரு ஆயுதம் ஒற்றமையென்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த ஒற்றுமையின் பலத்தை மற்றவாகள் உணாந்துகொள்ளக்கூடியவகையில் நாம் நடந்துகொள்ளவேண்டும். அதுவே பலமாகும். இந்த ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் செய்யவேண்டிய விடயங்களை செய்யவேண்டிய காலத்தில் நாம் செய்வோம். இவ்விவகாரங்கள் தொடர்பில் அதிகம் பேசிக்கொண்டிருப்பது ஆரோக்கியமாக அமையாது என்பது எனது கருத்தாகும் என்றார்