புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2018

கரும்புலிகள் அணியின் முன்னாள் முக்கிய பெண் போராளி இந்தோனேசியாவில் மரணம்?


விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் பிரிவின் முக்கிய பெண் உறுப்பினர் ஒருவர் இந்தோனேசியாவில் சிறுநீரக நோயினால் உயிரிழந்துள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் பிரிவின் முக்கிய பெண் உறுப்பினர் ஒருவர் இந்தோனேசியாவில் சிறுநீரக நோயினால் உயிரிழந்துள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தியா என்ற பெண் போராளியே இந்தோனேசியாவின் ஜகார்த்தா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குறித்த பெண் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை இராணுவ அதிகாரிகளான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மற்றும் பாரமி குலதுங்க ஆகியோரின் கொலைகளுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் சந்தியா என்கின்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற போது, படகு விபத்துக்குள்ளானதில், இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் முகாமில் அவர் தங்கியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே, குறித்த பெண் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்துள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad