புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2018

117 தொண்டராசிரியர்கள் தகுதி இருந்தும் புறக்கணிப்பு;


அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்ட 445 தொண்டராசிரியர்களில் 117 தொண்டராசிரியர்கள் தகுதி இருந்தும் எதுவித நியாயமான காரணங்களுமின்றி நிரந்தர நியமனத்திற்கான பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அநீதி இழைக்கப்பட்ட இவ் தொண்டராசிரியர்கள் விடயத்தில் கவனம் எடுக்குமாறு கிழக்கு மாகாண தமிழர் தொண்டராசிரியர் சங்கத்தின் தலைவர் நா. அன்பழகன் எதிர்க் கட்சித்தலைவர் இரா. சம்பந்தனுக்கு நேற்று (28) வழங்கிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக் கடிதத்தில் மேலும் தெரிவித்ததாவது,

இதுகால வரையில் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டும் எதுவிதமான தீர்வும் கிடைக்கவில்லை எனவே தாங்கள் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்களின் நியாயமான கோரிக்கையை கேட்டு அமைச்சரவையினால் வழங்கப்பட்ட பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில் நியாயங்களை பெற்றுத்தர ஆவண செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad