கடந்த 21ஆம் நாள் நடந்த அரசியலமைப்பு வரைவுக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில், அரசியலமைப்பு வரைவின் சிங்கள மொழிப் பிரதி சமர்ப்பிக்கப்பட்டது. வழிநடத்தல் குழுவுக்கு அதன் தமிழ் மொழிப் பிரதியும் கிடைத்துள்ளது. இது வரும் ஒக்ரோபர் 11ஆம் நாள் வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படும்.
வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டத்தில், அதன் உறுப்பினர்கள், புதிய அரசியலமைப்பு வரைவை இறுதி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து. அரசியலமைப்பு சபையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத்தில், ஒக்ரோபர் 25ஆம் நாளுக்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு வரைவு சமர்ப்பிக்கப்படும்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.