உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் விரை வில் சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன். அவை தொடர்பில் நாங்கள் செய்யவேண்டியவற்றை செய்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மேலும் அரசியல் தீர்வுத்திட்டத்தை அடைவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் உறுதியாக இருப்பதாகவே தெரிகின்றது. நாம் அதற்கான கருமங்களை செய்வோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மற்றும் அண்மைய ஜனாதிபதியுடனான சநதிப்பு குறித்து வினவியபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இவற்றை குறிப்பிட்டார்.
அவர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்கின்றது. அது தொடர்பில் என்ன செய்யப்போகின்றீர்கள்?
பதில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் விரைவில் சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன். அவை தொடர்பில் நாங்கள் செய்யவேண்டியவற்றை செய்வோம். சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது.
கேள்வி சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தீர்கள். என்ன விடயங்களை பேசினீர்கள்?
பதில் அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடினேன். ஜனாதிபதி பங்கேற்ற அரசியல் நிகழ்வில் நானும் பங்கேற்று உரையாடினேன். ஜனாதிபதியை பொறுத்தவரை அரசியல் தீர்வு விடயத்தில் இன்னும் உறுதியாகவே இருப்பதாகவே தெரிகின்றது.
கேள்வி இராணுவ வீரர்களை குற்றச்சாட்டுக்களிலிருந்து பாதுகாப்பது குறித்து ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு யோசனை முன்வைக்கவுள்ளமை குறித்து பேசினீர்களா?
பதில் அது தொடர்பில் பேசவில்லை