புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2018

குருந்தூர் மலைக்குச் செல்வதற்குத் தடை - முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு


முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைக்கு பொதுமக்கள் மற்றும் மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைக்கு பொதுமக்கள் மற்றும் மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 4ஆம் திகதி குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் பிக்குமார் உள்ளிட்ட 12 பேர் சென்றனர்.இதன்போது பிரதேச இளைஞர்கள் மக்கள் இணைந்து இவர்களை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் ஒட்டுசுட்டான் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த பிக்குமார் உள்ளிட்ட 12 பேரையும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

குறித்த விசாரணையின் போது அவர்கள் குருந்தூர் மலையில் முன்னர் இருந்த விகாரை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளதாகவும் அதற்காக பூகோளவியல் பணிப்பாளர் கொடுத்துள்ள கடிதத்தினையும் காட்டியுள்ளார்கள்.இதன் பின்னர் குறித்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் மதம் சார்ந்த எவரும் செல்வதற்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றில் நேற்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகள் நேற்று இநீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டவேளை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை குறித்த மலைக்கு எவரும் செல்ல முடியாதவாறு தற்காலிக தடை உத்தரவினை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

அத்துடன், விகாரை ஆய்விற்காக பிக்குமார் செல்வதற்கு அனுமதி கொடுத்த பூகோளவியல் பணிப்பாளரின் கடிதத்தின் உண்மை தன்மையினை உறுதிப்படுத்துமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 13ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad