காணாமல்போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச தினமான ஓகஸ்ட் 30ஆம் திகதி இந்த அறிக்கையை வெளியிட முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த சந்தர்ப்பதில் ஜனாதிபதி பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டிந்தார். எனவே, அவர் நாட்டில் இல்லாத காரணத்தால் அறிக்கை வெளியீட்டை பிற்போடுவதாக காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்திருந்தார்.