புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2018

நடிகைகளின் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு” - நடிகர் விஷால் அதிரடி

அண்மையில் நடிகர் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி-2 படத்தில் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அபோது நி
ரூபர்கள்,  மீ டூ’வில் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பெண்கள் பாலியல் புகார்கள் குறித்து பதிவிடுவது பற்றி கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த விஷால்.
சண்டக்கோழி-2 படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் மீது படக்குழுவில் உள்ள ஆண்கள் கண்ணியத்தோடு நடந்து கொண்டனர். பாலியல் தொல்லைகளை நடிகைகள் தாமதிக்காமல் உடனடியாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால் நிச்சயமாக விரைந்து நடவடிக்கை எடுப்போம். 
நடிகை அமலாபால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானபோது , அதை எங்களிடம் தெரிவித்தார். அப்போது நானும் கார்த்தியும் உடனடியாக மலேசியாவுக்கு தொடர்பு கொண்டு பேசி,  பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்தோம். இதுபோல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள் உடனே எங்களிடம் சொன்னால் நிச்சயம் விரைந்து நடவடிக்கை எடுப்போம். 

ad

ad