நோர்வூட் நிவ்வெளிகம பகுதிக்கு கடந்த ஒருவார காலமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பிரதான
வீதி மற்றும் 4 குடியிருப்புகள் உள்ளடங்களாக மேற்படிப் பிரதேசம் முற்றுமுழுதாகத் தாழிறங்கி விட்டதாக, அங்கிருந்துக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதேச மக்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், உயிராபத்துகள் எவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.