புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2018

இருந்தது போதும்; புறப்படப் போகிறேன்’-பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்த

இருந்தது போதும்; புறப்படப் போகிறேன்’
தான் இந்தப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து விலக​ வேண்டுமென்பது தான் அனைவரதும் விருப்பமென்றால், அந்தப் பதவியை இராஜினாமா செய்யத் தயாரென, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


இந்தப் பதவியை இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னிடம் அறிவிக்கவில்லை என்றபோதிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எச்சரிக்கையைத் தன்னால் உணர்ந்துகொள்ள முடிவதாகவும், பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

“இனி இருந்தது போதுமென்று நினைக்கிறேன். 33 வருடங்களாக, பொலிஸ் சேவையை நியாயமாகச் செய்துள்ளேன். எவரிடமும், ஒரு கல் துண்டையேனும் பெற்றுக்கொள்ளவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad