நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழர் தேசிய முன்னணித்தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார். அவர் மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட வருவார் என தெரிவித்திருந்தார்.
நெடுமாறனின் பேச்சு தமிழக அரசியல் தளத்தில் அதிர்வலைகளை கிளப்பிய நிலையில், நெடுமாறனின் பேச்சுக்கு பதிலளித்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், " மூத்த தலைவர் பழ. நெடுமாறன் மிகுந்த மரியாதைக்குரியவர். அவர் கூறுவதைப்போல பிரபாகரன் மீண்டும் வந்தால் தமிழ்ச்சமூகம் மகிழ்ச்சியடையும்" என தெரிவித்துள்ளார்