புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2018

பிரபாகரன் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி" இந்திய மத்திய அமைச்சர்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் மத்திய பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.



நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழர் தேசிய முன்னணித்தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார். அவர் மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட வருவார் என தெரிவித்திருந்தார்.

நெடுமாறனின் பேச்சு தமிழக அரசியல் தளத்தில் அதிர்வலைகளை கிளப்பிய நிலையில், நெடுமாறனின் பேச்சுக்கு பதிலளித்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், " மூத்த தலைவர் பழ. நெடுமாறன் மிகுந்த மரியாதைக்குரியவர். அவர் கூறுவதைப்போல பிரபாகரன் மீண்டும் வந்தால் தமிழ்ச்சமூகம் மகிழ்ச்சியடையும்" என தெரிவித்துள்ளார்

ad

ad