புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2018

புத்தளம் - மன்னார் வீதியுடனான போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை

புத்தளம் - மன்னார் வீதியுடனான போக்குவரத்துக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக  தடை விதிக்கப்பட்டுள்ளதாக
புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.என்.கே.அலஹகோன்  நேற்று   (06) தெரிவித்தார்.
நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக, கலாஓயா பெருக்கெடுத்துள்ளதால் புத்தளம் -எலுவன்குளம் பாலத்துக்கு மேலாக இரண்டு அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதாகவும் அவர் ௯றினார்.
இதனால் புத்தளம் - மன்னார் வீதி ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து போக்குவரத்துக்களும் புத்தளம் எலுவன்குளம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், புத்தளம் - மன்னார் பாதையூடாக பயணிப்போர் மாற்று வழியை பயன்படுத்துமாறும் அவர் ​வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை காலி மாவட்டத்தில் நேற்று முன்தினத்திலிருந்து (6) பெய்து வரும் கடும் மழைக் காரணமாக, மாபலகம- எஹலகந்த வீதியின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால்,போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது.
இவ்வாறு மண்சரிவுக்குள்ளான பகுதிகளை நேற்று காலை பிரதேசவாசிகள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்தமைக் குறிப்பிடத்தக்கது.

ad

ad