புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2018

நாப்போலியை வென்றது ஜுவென்டஸ்

நாப்போலியை வென்றது ஜுவென்டஸ்இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நாப்போலியுடனான போட்டியில் ஜுவென்டஸ் வென்றது.

இப்போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் பெற்ற கோலின் மூலம் நாப்போலி முன்னிலை பெற்றது. எனினும் சக வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வழங்கிய பந்தை 26ஆவது நிமிடத்தில் தலையால் முட்டிக் கோலாக்கிய ஜுவென்டஸின் மரியோ மண்டூஸிக் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

பின்னர், கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் கம்பத்தை நோக்கி உதைந்த உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி வந்த நிலையில், 49ஆவது நிமிடத்தில் கோலாக்கிய மரியோ மண்டூஸிக் ஜுவென்டஸுக்கு முன்னிலையை வழங்கினார். தொடர்ந்து 76ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வழங்கிய பந்தை லியனார்டோ பொனுச்சி கோலாக்க இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் ஜுவென்டஸ் வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற லேஸியோ அணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் றோமா வென்றது. றோமா சார்பாக, லொரென்ஸோ பெல்லெகிரினி, அலெக்ஸான்டர் கொலரோவ், பெடெரிக்கோ பஸியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை சிரோ இம்மொபைல் பெற்றார்.

கல்லேகிரி அணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது. இன்டர் மிலன் சார்பாக, லோடரோ மார்ட்டின்ஸ், மட்டியோ பொலிட்டானோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

ad

ad