புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2018

அநாமதேய துண்டுப்பிரசுரம்- தமிழ் மக்கள் பேரவை மறுப்பு

தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இத்துண்டுப் பிரசுரத்திற்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பேரவை ஊடக அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

அவ் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இவ்வாறு வெளியிடப்பட்ட இத்துண்டுப் பிரசுரமானது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி, இன்று தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கின்ற மாபெரும் மக்கள் கூட்டத்தைக் குழப்புகின்ற நோக்கத்தைக் கொண்டதாகும்.

இத்தகைய செயலில் யார் ஈடுபட்டாலும் இவை அநாகரிகமானவை. இத்தகைய செயற்பாட்டின் உள்நோக்கத்தை தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்வர்.

யார் எந்தக் குழப்பத்தைச் செய்ய முற்பட்டாலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் மாபெரும் மக்கள் எழுச்சிக் கூட்டம் திட்டமிட்டபடி இடம்பெறும். இக்கூட்டத்தில் அனைத்து தமிழ் மக்களையும் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.

ad

ad