அவ் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இவ்வாறு வெளியிடப்பட்ட இத்துண்டுப் பிரசுரமானது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி, இன்று தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கின்ற மாபெரும் மக்கள் கூட்டத்தைக் குழப்புகின்ற நோக்கத்தைக் கொண்டதாகும்.
இத்தகைய செயலில் யார் ஈடுபட்டாலும் இவை அநாகரிகமானவை. இத்தகைய செயற்பாட்டின் உள்நோக்கத்தை தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்வர்.
யார் எந்தக் குழப்பத்தைச் செய்ய முற்பட்டாலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் மாபெரும் மக்கள் எழுச்சிக் கூட்டம் திட்டமிட்டபடி இடம்பெறும். இக்கூட்டத்தில் அனைத்து தமிழ் மக்களையும் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.