புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2018

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பாடகர்

பிரபல பாடகர் கார்த்திக் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை பாடகி சின்மயி தனது
டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
சின்மயி கடந்த சில தினங்களாக பிரபலங்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்களைக் கொடுத்து வருகிறார். #MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன.
இவர்களில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண்என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது இந்த வருசையில் பிரபல பாடகர் கார்த்திக் இணைந்துள்ளார்.
இந்நிலையில் பாடகர் கார்த்திக் மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளதை பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,
” சில வருடங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சியில் பாடகர் கார்த்திக்கை சந்தித்தேன். என்னிடம் சந்தித்து பேசிய அவர், என் உடலை அவர் வர்ணித்தார். மேலும் அவர் என்னை தொட விரும்புவதாக கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு எந்த நிகழ்ச்சியில் அவரை சந்தித்தாலும், அவரை விட்டு விலகிச் சென்று விடுவேன். பெண் பாடகர்கள் அவரைப் பற்றி குறை கூறுவதை கேட்டிருக்கிறேன். அவர், திரையுலகில் பிரபலமான, செல்வாக்கு மிக்க பாடகர் என்பதால் பலர் அவர் மீது குறை கூறுவதற்கு தயக்கம் படுகின்றனர்”.
என கூறப்பட்டிருந்தது.
இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பாடகி சின்மயி  ” நான் நேற்று தான் அவருடன் சக ஜட்ஜாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தேன். ஆனாலும் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை நம்புகிறேன். மன்னித்துவிடுங்கள் உங்கள் நேரம் முடிந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

ad

ad