புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2018

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினருக்கு அஞ்சலி உரை


இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் சிறந்த சமூக சேவையாளருமான பெஞ்சமின் ஜேக்கப் மறைந்த நிலையில் அவருக்கான அஞ்சலி உரை நிகழ்வு நேற்று முன் தினம் (புதன் கிழமை) நாவாந்துறை புனித நீக்கிலார் கோவிலில் மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றது.

இந்த அஞ்சலி உரை நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா,இலங்கை தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், கட்சியின் பொருளாளர் கனகசபாபதி,யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ.சிறில்,புதிய சுதந்திரன் பத்திரிகை நிர்வாக பணிப்பாளர்மு.அகிலன் கலந்து கொண்டு அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.

இந்த அஞ்சலி உரை நிகழ்வில் பொதுமக்கள்,கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்

ad

ad