இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் சிறந்த சமூக சேவையாளருமான பெஞ்சமின் ஜேக்கப் மறைந்த நிலையில் அவருக்கான அஞ்சலி உரை நிகழ்வு நேற்று முன் தினம் (புதன் கிழமை) நாவாந்துறை புனித நீக்கிலார் கோவிலில் மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றது.
இந்த அஞ்சலி உரை நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா,இலங்கை தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், கட்சியின் பொருளாளர் கனகசபாபதி,யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ.சிறில்,புதிய சுதந்திரன் பத்திரிகை நிர்வாக பணிப்பாளர்மு.அகிலன் கலந்து கொண்டு அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.
இந்த அஞ்சலி உரை நிகழ்வில் பொதுமக்கள்,கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்