புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2018

சம்பந்தனை போன்று முட்டாள் தனமான முடிவை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் - கருணா

சம்பந்தனை போன்று முட்டாள் தனமான முடிவை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் - கருணா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சாணக்கியமான அரசியல்வாதி எனப் பலராலும் கூறப்பட்டாலும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொண்ட நடவடிக்கை போன்று முட்டாள் தனமான நடவடிக்கையை எவரும் மேற்கொள்ள மாட்டார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தங்களின் சுகபோக வாழ்விற்காகவும், தங்கள் நலன்களுக்காகவும் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தாமல் எமது மக்களின் பொதுநலன்களில் அக்கறையுள்ளவர்களாகச் செயற்படுவார்களாக இருந்தால் அவர்களை உண்மையிலேயே நாங்கள் வரைவேற்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில் - 
ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த நாட்டை முன்னேற்றுவதற்குப் பல வாய்ப்புகள் இருந்தும் அவற்றையெல்லாம் நழுவ விட்டு மஹிந்த குடும்பத்தைப் பலிவாங்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாரே தவிர இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என நினைக்கவில்லை.
அமெரிக்க டொலரிகன் விலை அதிகரிப்பானது ஒரு நாட்டின் முன்னேறாத நிலையினையே காட்டுகின்றது. பிச்சைக்கார நாடாக மாறுவதற்கான அறிகுறிதான் அது. அத்துடன் மத்திய வங்கிக் கொள்ளை போன்ற பல விடயங்கள் இருக்கின்றன. இன்று அவற்றையெல்லாம் பொறுக்க முடியாமல் தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கின்ற வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கின்றன. இந்த வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் அவருக்கு ஆதரவை வழங்க முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

ad

ad