புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2018

ஏழுவர் விடுதலையை பரிசீலிக்கக் கோரி நடிகர் விஜய்சேதுபதி ஆளுநருக்கு கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு
நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், நளினி, சாந்தன் உட்பட ஏழு பேரும் சிறை சென்று இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது. 
இதையடுத்து  என்ற ஹேஷ்டேக்கின் கீழ், அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
தற்போது ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரென்டிங்காகி வருகிறது. இதனை முன்னிட்டு, நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் மனித உரிமை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
நடிகர் விஜய்சேதுபதி தனது பதிவில், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் தண்டனை விவகாரம் தமிழர்கள் பிரச்னை சார்ந்தது மட்டுமல்ல, மனித உரிமை அடிப்படை அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 
இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் இந்த பதிவு அனைவரவாலும் ரீ-ட்வீட் செய்யப்பட்டு வருகிறது. 

ad

ad