ட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு உறுப்பினர்கள்
18 பேரும், சிறையிலுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்கவுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) அங்கு சென்று கலந்துரையாடவுள்ளனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் குறித்த 18 பேரும் செல்லவுள்ளனர்.