புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2018

தவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் வியாழேந்திரன் கூட்டமைப்புடன் இணைய வேண்டும்

தவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் வியாழேந்திரன் கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“கடந்த ஆட்சி காலத்தில் நடைபெற்ற அராஜகங்கள், அடாவடித்தனங்கள் மற்றும் கடத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிராக செயற்பட வேண்டுமெனவும் அவர்களுக்கு தண்டனைகளை வழங்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் தெளிவாக தமிழ் மக்கள் தங்களின் ஆணையை வழங்கியிருந்தனர்.

ஆனால் அவற்றை எல்லாம் முழுமையாக புறக்கணித்துவிட்டு, மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்காமல் தன்னுடைய சுயநல அரசியலுக்காக யாருக்கு எதிராக வாக்களித்தோமோ, அவர்களுடன் கூட்டணி அமைத்து தமிழ் மக்களை ஏமாற்றி விட்டீர்கள்.

அந்தவகையில் தவறுகள் எவருமே விடலாம். ஆகையால் அதனை திருந்திக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது.

இதனால் இப்போது இருக்கின்ற காலத்தினையாவது பயன்படுத்தி, அத்தவறுகளை திருத்திகொண்டு மீண்டும் இக்கட்சியில் இணைந்துகொள்வதற்கு வியாழேந்திரன் சிந்திப்பாராயின் சிறந்தவொன்றாகும்.

மேலும் சிலரின் தவறான வழிநடத்தலினால் உங்களது எதிர்கால அரசியல் நகர்வுகளை பூச்சியமாக்கி கொள்ளாமல் தவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் மீண்டும் கட்சியில் இணைந்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்” என ஸ்ரீ நேசன் வலியுறுத்தியுள்ளார்

ad

ad