புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2018

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போகிறேன்

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
எனினும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலமை காரணமாக நாடு பாரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது முறையான பிரதமர் இன்மையால் இன்று அரச அலுவலகங்கள் சரியான முறையில் இயங்குவதில்லை
என்று கூறியுள்ள குமார வெல்கம, ஒரு பிரதமர், பிரதமர் அலுவலகத்திலும் மற்றொரு பிரதமர் அலரி மாளிகையிலும் இருப்பதால் நாட்டிற்கு எவ்வித பயனும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதைவிட சிறந்த முறையில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொண்டிருக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
அனைத்து செயற்பாடுகளும் அரசியலமைப்புக்கு உட்பட்டு இடம்பெற வேண்டும் என்றும், இன்று உடை அணிந்து கொண்டு பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாது என்றும், பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 27 visits today)பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போகிறேன்

ad

ad