புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2018

ஐக்கிய தேசிய முன்னணி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும் என்றும், வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான அனுமதி பெறப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.
கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று மாலை நடைபெற்ற ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ வெற்றிக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
”ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக போராடிய அனைவருக்கும் முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒக்டோபர் 26 ஆம் திகதியுடன் எல்லாம் முடிவடைந்துவிடும் எனச் சிலர் நினைத்தனர். ஆனால், மக்கள் சக்தி என்றால் என்னவென்பதை நாம் காட்டியுள்ளோம். பல சவால்களுக்கு மத்தியில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தோம்.
இனிவரும் காலப்பகுதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மக்கள் பக்கம் நின்று தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும். ஜனநாயகத்துக்காக அணிதிரண்ட கூட்டணி தொடரவேண்டும்.
எனவே, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் தற்போது கூட்டணியாகச் செயற்படும், ஐக்கிய தேசிய முன்னணி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும்” – என்றார்.

ad

ad