புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2018

ரணில் - மகிந்த திடீர் பேச்சு ? - கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கிடையே முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது என அரசியல் வட்டாரங்கலிருந்து அறியமுடிகின்றது.

தொலைபேசியூடாகவே இருவரும் பேசிக்கொண்டனர் என்றும், மதத்தலைவர் ஒருவரின் முயற்சியாலேயே இது நடந்துள்ளது என்றும் தெரியவருகின்றது.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வமாக எவ்வித தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

ad

ad