புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2018

கூட்டமைப்பு எம்.பிக்கள் யாரிடமும் இரட்டை குடியுரிமை இல்லை: உறுதிசெய்தார் சுமந்திரன்

இரட்டைக் குடியுரிமை குறித்து தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் யாருக்குமே இரட்டை குடியுரிமை கிடையாதென்பதையும் உறுதிசெய்தார்.

இன்று, யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- “கூட்டமைப்பில் நான் உட்பட மூன்று நாடாளுமன்ற உறுப்பினருக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளது எனவும், அது தொடர்பில் உச்சநீதிமன்றத்தை நாடி குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை இல்லாமலாக்குவோம் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறான இரட்டைக் குடியுரிமை எனக்கு மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எவருக்கும் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றேன். அண்மைக்காலமாக எனது நடவடிக்கையால் மிகவும் நொந்துபோயுள்ள மஹிந்த அணியினர் என் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளால் அதிகம் விமர்சிக்கப்படுபவராக நான் உள்ளேன்.

இதனால் தான் இவ்வாறான பொய்யான பிரசாரங்களை என் மீதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்“ என்றார்

ad

ad