இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சி நிலவும் யாழ். மாநகர சபையின் அமர்வு மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று முற்பகல் கூடியது.
யாழ். மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் கடந்த 7 ஆம் திகதி மேயரினால் சமர்ப்பிக்கப்பட்டது, எனினும் அன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகள் வரவுசெலவுத்திட்டத்தினை நிராகரித்தன.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்ட திருத்தங்களுடன் இன்று மீண்டும் சபையில் வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவுடன் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 9 உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.