புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2018

திர்க்கட்சி பொறுப்பிலிருந்து த.தே.கூட்டமைப்பு நீங்க வேண்டும்

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமை பொறுப்பை வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் அமைக்க ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியாயின் அவர்கள் எதிர்க்கட்சி பொறுப்புக்களில் இருந்து நீங்கிக்கொள்ளவேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்லேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமை வகிக்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரளிப்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. உலகில் எந்த நாட்டிலும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பொறுப்பை வகிக்கும் கட்சி அரசாங்கம் அமைக்க ஆதரவளிப்பதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களிலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சியின் தீர்மானங்களை ஆதரித்தே வந்துள்ளது.

ad

ad