ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறும் நோக்கில் அந்த கட்சியுடன் எந்த உடன்படிக்கையையும் செய்துகொள்ளவில்லை என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இரு கட்சிகளிற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது என பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளன என குறிப்பிட்டுள்ள ஐக்கியதேசிய கட்சி இவ்வாறான கருத்தை பரப்புவதற்காக போலி ஆவணமொன்றை இனந்தெரியாத நபர்கள் தயாரித்து வெளியிட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது