புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2018

விசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட 10 அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று 4 ஆவது நாளா­கவும் விசா­ர­ணைகள் இடம்­பெற்றது.

ஏற்­க­னவே உயர் நீதி­மன்­றினால் குறித்த மனுக்­களை விசா­ரணை செய்ய நிர்­ண­யிக்­கப்­பட்ட மூன்று நாட்­களும் நேற்­றுடன் நிறை­வ­டைந்த போதும், விசா­ர­ணைகள் நிறை­வ­டை­யா­ததால் இன்று நான்காம் நாளா­கவும் விசா­ர­ணை­களை தொடர் உயர் நீதி­மன்றத்தில் இடம்பெற்றது.

இந் நிலையிலேயே குறித்த வர்த்தமானி அறிவத்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் இன்று நிறைவடைந்த நிலையிலேயே, தீர்ப்பு அறிவிக்கப்படும வரை இடைக்காலத் தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிர­தம நீதி­ய­ரசர் நலின் பெரே­ராவின் கீழ் பிரி­யந்த ஜய­வர்­தன, பிர­சன்ன ஜய­வர்­தன, புவ­னேக அலு­வி­ஹார, விஜித் மலல்­கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்­ணான்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதி­யர்­சர்கள் குழாம் இம்­ம­னுக்கள் விசா­ரிக்­கப்ப்ட்டு வரு­கின்­றன

ad

ad