புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2019

டாலை வென்று சம்பியனானார் ஜோக்கோவிச்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி நாளான இன்று, உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் சம்பியனானார்.

உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடாலை எதிர்கொண்ட சேர்பியாவின் ஜோக்கோவிச், 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான தனிநபர் இறுதிப் போட்டியில் உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவாவை எதிர்கொண்ட உலகின் நான்காம்நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா, 7-6 (7-2), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் சம்பியனாகியிருந்தார்.

ad

ad