அரச சேவையாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில், மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அரச சேவையாளர்களின் சில செயற்பாடுகளால்,அரச சேவைப் பணிகளில் தவறுகள் ஏற்படுவதை தெளிவுப்படுத்தியுள்ள அவர், கடமை நேரத்தில் ‘பேஸ்புக்’ போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், அவ்வாறு தனக்கு ஏதேனும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் பணி நீக்கம் செய்த பின்னரே, ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
மக்கள் சேவையை சிறப்பான ஆற்ற வேண்டும் என தெரிவித்துள்ள அவர், ஒரு சிலர் மாத்திரமே கடுமையாக வேலை செய்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.