புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2019

சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை?

அரச திணைக்களங்களில் பணியின் போது சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச சேவையாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில், மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அரச சேவையாளர்களின் சில செயற்பாடுகளால்,அரச சேவைப் பணிகளில் தவறுகள் ஏற்படுவதை தெளிவுப்படுத்தியுள்ள அவர், கடமை நேரத்தில் ‘பேஸ்புக்’ போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், அவ்வாறு தனக்கு ஏதேனும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் பணி நீக்கம் செய்த பின்னரே, ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
மக்கள் சேவையை சிறப்பான ஆற்ற வேண்டும் என தெரிவித்துள்ள அவர், ஒரு சிலர் மாத்திரமே கடுமையாக வேலை செய்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad