புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2019

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவும், புளொட்டும் இரட்டை வேடத்துடன் செயற்படுகின்றன-சிவசக்தி ஆனந்தன்

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவும், புளொட்டும் இரட்டை வேடத்துடன் செயற்படுகின்றன
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவும், புளொட்டும் இரட்டை வேடத்துடன் செயற்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்கள் விளையாட்டுக்கழகங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். வரவு செலவு திட்டம் உள்ளிட்ட பல அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரெலோவும், புளொட்டும் ஆதரவு வழங்கி வந்தனர். தற்பொழுது புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட பல விடயங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறுகின்றனர்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad