வடமாகாண ஆளுனராக இன்றைய தினம் பதவியேற்ற சுரேன் ராகவன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் உள்ள சகல அரச திணைக்களங்களினதும் பெயர்பலகைகள் மும்மொழிகளில் அமையவேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றும் போது வடக்கு மாகாண ஆளுநர் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.