புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2019

நன்றியுடன் விடை பெற்றார் அங்கெலா மேர்கெல்

ஜேர்மனிய சான்சிலர் அங்கெலா மேர்கெல் தனது ஆதரவாளர்களிடம் விடைபெறுவதாக அறிவித்து நன்றி தெரிவித்துள்ளார்.

நான் இனிமேல், CDU கட்சியின் தலைவர் அல்லர் என்றும் ஆர்வமுள்ளவர்கள் இன்னும் அவரது பணியை தொடர்ந்து பின்பற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது முகப்புத்தக பக்கத்தை பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாகவும், இதுவரை எனது முகப்புத்தகத்திற்கு ஆதரவு அளித்து வந்தவர்களுக்கு நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் CDU கட்சியின் தலைவராக தொடர்ந்து நீடிக்க முடியாத காரணத்தால் எனது முகப்புத்தக பக்கத்தை பயன்படுத்துவதை நிறுத்தப்போகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் என் வேலையை தொடர நான் விரும்புகிறேன், சான்சிலராக வேலை செய்கிறேன். நீங்கள் மத்திய அரசாங்க பக்கத்தில் அல்லது Instagram பக்கத்தில் என்னை பின்பற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேர்கெல் தனது சான்சிலர் பணிக்காலம் முடியும்வரை பதவியில் நீடிப்பேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ad

ad