இந்தநிலையில் நாளைய தினம் வலிகாமம், கோப்பாய், யாழ்ப்பாணம், மயிலிட்டி மற்றும் காங்கேசன் துறை போன்ற பிரதேசங்களுக்கு செல்லவுள்ள பிரதமர் வலிகாமம் கிழக்குப் பகுதிக்கான பிரதேச செயலாளர் அலுவலகத்தின் திறப்புவிழா, யாழ்பாண மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ள மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெறும் கலந்துரையாடலிலும் பங்குப்பற்றவுள்ளார்.
மேலும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் திறப்பு விழாவில் பங்குப்பற்றவுள்ளதுடன் காங்கேசன் துறைமுகத்தை பார்வையிடவும் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது