புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2019

பிரதமர் நாளை யாழ் செல்கின்றார்

´பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். நாளை யாழ்ப்பாணம் செல்லும் பிரதமர் எதிர்வரும் சனிக்கிழமை வரை வடக்கில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்தநிலையில் நாளைய தினம் வலிகாமம், கோப்பாய், யாழ்ப்பாணம், மயிலிட்டி மற்றும் காங்கேசன் துறை போன்ற பிரதேசங்களுக்கு செல்லவுள்ள பிரதமர் வலிகாமம் கிழக்குப் பகுதிக்கான பிரதேச செயலாளர் அலுவலகத்தின் திறப்புவிழா, யாழ்பாண மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ள மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெறும் கலந்துரையாடலிலும் பங்குப்பற்றவுள்ளார்.

மேலும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் திறப்பு விழாவில் பங்குப்பற்றவுள்ளதுடன் காங்கேசன் துறைமுகத்தை பார்வையிடவும் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad