புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2019

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தூக்குத் தண்டனையால் இல்லாமல் போகலாம்;சுமந்திரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூக்குத் தண்டனையை அமுல்படுத்தினால் நாட்டுக்குக் கிடைத்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த தூக்குத் தண்டனையை இன்னும் இரண்டு மாதங்களில் முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். சிறிது காலம் நீக்கப்பட்டு மீண்டும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு உறுதுணையாக பல்வேறு பிரயத்தனங்களின் பின்னர் கிடைக்கப் பெற்ற இந்த விசேட சலுகை ஜனாதிபதியின் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்தினால் இழக்கச் செய்யப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு அரச தொலைக் காட்சியில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் இந்த சலுகை 27 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு நீக்கப்பட்டிருந்தது. பின்னர் நல்லாட்சி அரசாங் காலத்தில் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad