இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்த அவர் கருத்து வெளியிடுகையில் வைத்தியசாலை தாதியர்கள் சிலரை தொடர்புபடுத்தி சில போலி இணையங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.அதில் என்னிடம் அதனை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளன.
இவ்வாறான சம்பவம் ஏதுமே நடந்திருக்கவுமில்லை.என்னுடன் இச்செய்தி தொடர்பாக எவரும் உரையாடவுமில்லை.
இந்நிலையில் பொய்யான செய்திகளை பிரசுரித்து அவர்களிற்கு மனவுளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே யாழ்.போதனாவைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் தொடர்பில் தொடர்புபடுத்தி அநாமதேய இணையங்கள் சில செய்தி வெளியிட்டிருந்ததை கண்டித்து இன்று தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.