இந்தச் சந்திப்பு நேற்றுக் கொழும்பில் நடைபெற்றுள்ளது.மக்களின் வாழ்வாதாரத்தை உயர்ந்துவது, இளையோருக்குச் சுயதொழில் பயிற்சிகளை வழங்குதல், மொழிக் கற்கைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வது போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார்.
தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர், அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்று தூதுவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. இந்த ஆண்டு ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வில் இது தொடர்பாக முறையிடவுள்ளேன் என்றும் தூதுவர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.