நீதிமன்றத்துக்கு நேர்த்தியாக ஆடை அணியாமல், ஒழுக்கம் பேணாது வருவோர்களாயின், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர், முடமாவடியில் வீடுகளை அடித்து உடைத்தமை, மற்றும் வாள்வெட்டில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு யாழ் நீதி மன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துள்ளப்பட்டது.
அவர்களை அவதானித்த நீதிவான் நீதிமன்றுக்கு சமூகம் அளிக்கும் போது ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்,
ஒழுக்கமற்ற முறையில் வந்தால் சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.நீதிமன்றத்துக்கு நேர்த்தியாக ஆடை அணியாமல், ஒழுக்கம் பேணாது வருவோர்களாயின், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்