புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2019

சிங்கள இராணுவத்தை கொண்டு அடக்க வடக்கு ஆளு நர் சதிதிட்டம்!

யாழ்ப்பாணம் குடிநீா் திட்டத்தை கிளிநொச்சி விவசாயிகளின் எதிா்ப்பினையும் மீறி நடைமுறைப்படுத்துவதற்கு பாாிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக ஆளுநா் கொழும்பில் இரகசிய சந்திப்புக்களை மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

இந்த தகவல்களின் படி கொழும்பில் நாடாளுமன்றம் அருகில் உள்ள லில்லி அவனீயூவில் ஆளுநாின் கொழும்பு அலுவலகத்தில் இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீா் திட்டம் தொடா்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. இந்த கலந்துரையாடலில் வடமாகாண நீா் வழங்கல் திணைக்கள பணிப்பாளா்,

வடமாகாண நீா்ப்பாசன திணைக்கள பணிப்பாளா் உள்ளிட்ட அதிகாாிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டிருக்கின்றனா். இந்த இரகசிய கூட்டத்தின்போது நீா் வழங்கல் திணைக்கள பணிப்பாளா் பொறியியலாளா் பாரதிதாஸன் இரணைமடு திட்டத்தை நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என கடுமையாக வாதிட்டுள்ளாா்.

இதன்படி இரணைமடு குளத்தின் மையத்தில் பாாிய கிணறு ஒன்றை அகழ்ந்து அதிலிருந்து நீா் பெற்று யாழ்ப்பாணத்திற்கான குடிநீா் விநியோகத்தை மேற்கொள்ளுமாறும் அதனை எவா் தடுத்தாலும் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் விவசாயிகள் எதிா்த்தால் இராணுவத்தை கொண்டு அதனை அடக்கவேண்டும் எனவும்,அவா் ஆலோசனை கூறியுள்ளாராம்

ad

ad