புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2019

நியூசிலாந்துமசூதி தாக்குதல் முகநூலில் நேரலை! 49 பேர் பலி!


நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது அங்கு திடீரென நுழைந்த ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 49 பேர் வரை பலியாகியுள்ளனர்.


தாக்குதல் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆயுதப்படை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் அருகில் உள்ள மற்றொரு மசூதியிலும் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தினான்.

இரண்டு இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் 40 பேர் உயிரிழந்ததாக பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் தெரிவித்தார். அதன்பின்னர் இரவு 9 மணி நிலவரப்படி (உள்ளூர் நேரப்படி) பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது. சுமார் 50 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை தாக்குதல் நடத்தியதை அந்த நபர்கள் முகநூல் தளத்தில் நேரலையாக சம்பவத்தை ஒளிபரப்பியது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



ad

ad