புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2019

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அகமது கானை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது


புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அகமது கானை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அகமது கானை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது என தகவல் வெளியாகியுள்ளது
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14–ந் தேதி துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்–இ–முகமது இயக்கம் பொறுப்பேற்றது.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வுப்பிரிவு உள்பட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. குறிப்பாக இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள், அதற்கு உதவி செய்தவர்கள் என அனைவரின் விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதன் பயனாக, இந்த காட்டுமிராண்டித்தனமான செயலின் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

இதில் முக்கியமாக, மேற்படி தாக்குதலுக்கு உதவி செய்த பயங்கரவாதியை அதிகாரிகள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

அதன்படி புல்வாமா மாவட்டத்தின் மிர் மொகல்லா பகுதியை சேர்ந்த முதாசிர் அகமது கான் என்கிற முகமது பாய் (வயது 23) என்ற எலெக்ட்ரீசியனே இந்த தாக்குதலுக்கு தேவையான உதவிகளை செய்திருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளின் பட்டியலில் அதிக பிரபலம் இல்லாத இவர் பட்டப்படிப்பை முடித்து ஐ.டி.ஐ.யில் எலெக்ட்ரீசியன் பயிற்சியையும் முடித்துள்ளார்.

இவர்தான் புல்வாமா தாக்குதலுக்கு தேவையான வாகனம் மற்றும் வெடிபொருளை ஏற்பாடு செய்து கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதற்காக மேற்படி தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அடில் அகமது தார், தொடர்ந்து இவருடன் தொடர்பில் இருந்துள்ளதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பயங்கரவாதி முதாசிர் அகமது கான் கடந்த 2017–ம் ஆண்டுவாக்கில் ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தில் இணைந்திருக்கிறார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த பயங்கரவாத இயக்கத்தை மறுசீரமைத்த நூர் முகமது தந்திரியின் மரணத்துக்குப்பின் கடந்த ஆண்டு ஜனவரி 14–ந் தேதி வீட்டை விட்டு மாயமாகி உள்ளார். சஞ்சுவான் ராணுவ முகாம், லெத்போரா சி.ஆர்.பி.எப். முகாம்கள் மீது ஏற்கனவே நடந்த தாக்குதல்களில் இவரது பங்களிப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில், புல்வாமா தாக்குதலிலும் இவனே முக்கிய பங்காற்றி இருப்பது பாதுகாப்பு படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அகமது கான் உயிரிழப்பு

இதற்கிடையே டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள் மூவர் கொல்லப்பட்டனர். இரண்டு பயங்கரவாதிகள் ஜெய்ஷ் அமைப்பின் கமாண்டர்களாக செயல்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவன் முகமது கான் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே அடையாளம் காணும் பணி தொடர்கிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ad

ad