புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2019

கிளிநொச்சிக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணங்களுக்கு நடந்தது என்ன?


கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினை தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பெருமளவான வெள்ள நிவாரணப்பொருட்கள் கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் இதுவரை எவ்வளவு பொருட்கள் மாவட்டச் செயலகத்திற்கு கிடைத்துள்ளன. அவற்றை எங்கெங்கு எவ்வளவு பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட என்ற வெளிப்படையான தகவல்கள் எவையும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

அரசு, அரசசார்பற்ற நிறுவனங்கள், பொது அமைப்புகள், தனிநபர்கள் என பெருந்தொகை நிவாரணப்பொருட்கள் மாவட்டச் செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தன. என்னெ்ன பொருட்கள் எவ்வளவு கிடைத்தது. அதனை மாவட்டச்செயலகம் எந்தடிப்படையில் எந்தெந்த பிரதேசங்களுக்கு எவ்வளவு தொகையான பொருட்களை பகிர்ந்தளித்ததுள்ளது என்ற எந்த தகவல்களிலும் வெளிப்படையில்லை எனவும் பொது மக்கள் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது

கிடைக்கப்பெற்ற அனைத்துப் பொருட்களும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் பொது மக்கள் தரப்பால் எழுப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் உரிய தரப்பினர் பதிலளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

ad

ad